ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும்? – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

 

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும்? – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வந்ததன் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது வருடமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும்? – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டு முதல் இந்தத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும்? – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அதன்படி முதல் கட்டம் பிப்ரவரியிலும் இரண்டாம் கட்டம் மார்ச் மாதத்திலும் நடத்தப்பட்டன. 2ஆம் அலை காரணமாக அடுத்தடுத்த கட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூலை மாதம் நடைபெறவிருந்த அட்வான்ஸ்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். அதன்படி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு அக்டோபர் 3ஆம் தேதி நடத்தப்படும் என்றும், அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.