நிதிஷ் குமார் குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை… பல்டி அடித்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.

 

நிதிஷ் குமார் குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை… பல்டி அடித்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 6 மாதத்துக்கு பிறகு பதவி விலகுவார் என்று நான் சொல்லவே இன்று ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் புதிய அரசு அமைந்து 2 மாதங்கள்தான் ஆகிறது ஆனால் அந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

நிதிஷ் குமார் குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை… பல்டி அடித்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.
தேஜஸ்வி யாதவ்

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே நிதிஷ் குமார் பதவியிலிருந்து விரைவில் விலகி விடுவார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி பேசியது ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. கோபால் மண்டல். ஆனால் இப்போது நான் அப்படி பேசவில்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.

நிதிஷ் குமார் குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை… பல்டி அடித்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.
கோபால் மண்டல்

தற்போது எம்.எல்.ஏ. கோபால் மண்டல் கூறியதாவது: நான் ஒருபோதும் அப்படி சொல்லவே இல்லை. யாரோ ஒருவர் எனது அறிக்கையை பதிவு செய்து அதனை எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தேஜஸ்வி யாதவால் ஒரு போதும் பீகார் முதல்வராக முடியாது. நிதிஷ் குமாரை யாராலையும் நீக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.