முத்துராமலிங்கலிங்கம் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் தமிழில் நட்டா ட்வீட்

 

முத்துராமலிங்கலிங்கம் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் தமிழில் நட்டா ட்வீட்

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பசும்பொன் முத்துராமலிங்கலிங்கம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அவரை புகழ்ந்து தமிழில் ட்விட் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பின்னர் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெபி நட்டா, “இன்று மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தினேன். ஒரு முற்போக்கான சமுதாயத்தை பற்றிய அவரது பார்வை, ஆன்மீகம் மற்றும் தாய்நாட்டின் மீதான அவரது அன்பும் எப்போதும் அனைத்து தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும்” என புகழ்ந்து தமிழ் மொழியில் ட்விட் செய்துள்ளார்.