ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கு : இன்று மதியம் இடைக்கால உத்தரவு!

 

ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கு : இன்று மதியம் இடைக்கால உத்தரவு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கு : இன்று மதியம் இடைக்கால உத்தரவு!

இதனிடையே, ஜெயலலிதாவின் இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை திறக்கவிருப்பதாக அறிவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கு : இன்று மதியம் இடைக்கால உத்தரவு!

இதையடுத்து, வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தொடர்பாக இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேசஷாயி இடைக்கால உத்தரவு வழங்கப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.