“ஜெயலலிதா மரணம்- ஒபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?”- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

 

“ஜெயலலிதா மரணம்- ஒபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?”- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

திருச்சி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

“ஜெயலலிதா மரணம்- ஒபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?”- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சட்டமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்காததால், கோபத்தில் தமிழ்நாட்டிற்கான புயல் நிவாரணம் உள்ளிட்ட நிதிகளை ஒதுக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு தொடர்பு உள்ளது என தாம் பகிரங்கமாக கூறுவதாகவும், முடிந்தால் தன் மீது வழக்கு போடலாம் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் கைதாகி உள்ள அதிமுக நிர்வாகி அருளானந்தம், தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவை சேர்ந்த மத்திய அமைச்சர்களோடும் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துள்ளதாகவும் கூறினார்.

“ஜெயலலிதா மரணம்- ஒபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?”- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் அவர் எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது என்ற உதயநிதி, ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக முதலில் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்