ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகி கோரிய வழக்கு நாளை விசாரணை…

 

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகி கோரிய வழக்கு நாளை விசாரணை…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். அவரின் சொத்துக்களை நிர்வகிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க கோரினர்.

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகி கோரிய வழக்கு நாளை விசாரணை…

மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்த வழக்குகளில் நீதிபதிகள் நாளை காணொலி காட்சி மூலம் தீர்ப்பளிக்கவுள்ளனர்.