அதிமுவில் ஒற்றை தலைமை கோரி கோஷமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 

அதிமுவில் ஒற்றை தலைமை கோரி கோஷமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சட்டமன்றத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் சலசலப்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுவில் ஒற்றை தலைமை கோரி கோஷமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வரும் 14 -ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைப்பெறும். அதற்காக டிஜிபியை சந்தித்து அனுமதி கேட்டுள்ளோம். அதிமுக சசிகலா இல்லாமல் எழுச்சியோடு சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை தொடரும். ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்

அதிமுவில் ஒற்றை தலைமை கோரி கோஷம் இல்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதற்கான அறிக்கை விரைவில் வெளிவரும். கொரோனா செயல்பாடுகளில் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி தான். ஊரடங்கிலும் டிராபிக் ஜாம். திமுக ஆட்சியில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.