எம்ஜிஆர், ஜெயலலிதாவால் பயிற்சி பெற்றவன் நான்- அமைச்சர் ஜெயக்குமார்

 

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் பயிற்சி பெற்றவன் நான்- அமைச்சர் ஜெயக்குமார்

நீந்த தெரிந்தவனுக்கு ஆழம் கவலையில்லை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் டிஹெச் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீந்த தெரிந்தவனுக்கு ஆழம் கவலையில்லை. நீந்த தெரியாதவன் தான் கடலில் தத்தளிக்கனும், நான் கடல், ஆறு குளம் உள்ளிட்டவற்றில் நீந்தி பழக்கப்பட்டவன். எனவே இந்த தொகுதியில் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மேலும், ராயபுரம் மட்டும் தமிழகம் முழுவதும் அதிமுக அரசு அமையும், என்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்தேன். ஆதலால் அவர் என் தொகுதி பக்கமே வரவில்லை. இந்த தொகுதி மக்கள் சாதாரண வேட்பாளரைதான் வெற்றிப்பெற வைப்பர். இன்னும் 100 ஆண்டுகள் அதிமுகவே ஆட்சியில் இருக்கும். திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் பயிற்சி பெற்றவன் நான்- அமைச்சர் ஜெயக்குமார்

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் பயிற்சி பெற்றவன் நான். எம்ஜிஆரின் மாணவன் என்ற முறையில் என்னிடம் தைரியம், தெம்பு, மக்களுக்கு செய்கின்ற தொண்டு இதையெல்லாம் பார்த்த மக்கள் எனக்கு மிகவும் வரவேற்பு அளிக்கின்றனர்” எனக் கூறினார்.