“சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை; அவர் வீட்டு வேலை செய்ய வந்தவர்”

 

“சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை; அவர் வீட்டு வேலை செய்ய வந்தவர்”

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு வேலைகளை செய்ய வந்தவர்தான் சசிகலா என்பதை தலைவி திரைப்படம் சரியாக காட்டியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை; அவர் வீட்டு வேலை செய்ய வந்தவர்”

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளி வந்துள்ள தலைவி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வரலாற்றை திரித்துக் கூறுவது ஏற்புடையதல்ல. திமுகவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு வெளியேறினார் ஆனால் மந்திரி பதவி கேட்டே, திமுகவை விட்டு பிரிந்ததாக காட்சி வந்திருப்பது தவறு. ஆகவே அந்தக்காட்சியை நீக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறப்பான படம். திமுகவிற்கு ஆதரவான வகையிலேயே படம் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரை, ஜெயலலிதா அவமதிப்பது போலிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும். எம்.ஜி.ஆரை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியவில்லை. சசிகலாவுக்கும் அரசியலக்கும் சம்பந்தமில்லை என்றும், அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதையும் தலைவி படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.