தொடங்கியது திமுக வன்முறை ; அம்மா உணவகத்தை சூறையாடியதாக ஜெயக்குமார் புகார்!

 

தொடங்கியது திமுக வன்முறை ;  அம்மா உணவகத்தை சூறையாடியதாக ஜெயக்குமார் புகார்!

அம்மா உணவகத்தை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியது கண்டனத்துக்குரியது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது திமுக வன்முறை ;  அம்மா உணவகத்தை சூறையாடியதாக ஜெயக்குமார் புகார்!

சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் சிலர் நுழைந்து அதன் பதாகைகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதிமுகவினர், திமுகவின் அராஜகம் தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், ” அம்மா உணவகத்தில் இருந்து ஊழியர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி திமுகவினர் கொலைவெறி தாக்குதல் என்று பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பில் அமர்வதற்கு முன்னரே அராஜகத்தை தொடங்கியுள்ளதாக அதிமுகவினர் சாடி வருகின்றனர். அத்துடன் இதுபோன்ற செயலில் ஈடுபடும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.