திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

 

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

திமுக பொருளாளரான துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் திமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனால் கடுப்பான துரைமுருகன், “நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்” என்று காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும். அதிமுக ஒரு ஆலமரம்; அது அதிருப்தியில் உள்ள திமுகவினர் யார் வந்தாலும் நிழல் கொடுக்கும். திமுக பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

பொதுச்செயலாளர் பதிவி கிடைக்காததால் அதிருப்தி என்ற செய்திக்கே கொந்தளித்த துரைமுருகன், அதிமுகக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு நிச்சயம் பதில் அளிப்பார் என்று திமுகவினர் கருத்து கூறி வருகின்றனர்.