மேற்கு வங்க மக்களை யாராலும் மிரட்ட முடியவில்லை.. பா.ஜ.க.வை மறைமுகமாக அமிதாப் பச்சனின் மனைவி

 

மேற்கு வங்க மக்களை யாராலும் மிரட்ட முடியவில்லை.. பா.ஜ.க.வை மறைமுகமாக அமிதாப் பச்சனின் மனைவி

மேற்கு வங்க மக்களை யாராலும் மிரட்ட முடியவில்லை என பா.ஜ.க.வை மறைமுகமாக சமாஜ்வாடி எம்.பி. ஜெயாபச்சன் தாக்கினார்.

நடிகர் அமிதாப்பச்சன் மனைவியும், சமாஜ்வாடி எம்.பி.யுமான ஜெயா பச்சன், திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசின் தலைமை அலுவலகத்தில் ஜெயாபச்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எங்க (சமாஜ்வாடி) கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின் பேரில் திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்வதற்காக நான் மேற்கு வங்கத்தில் உள்ளேன்.

மேற்கு வங்க மக்களை யாராலும் மிரட்ட முடியவில்லை.. பா.ஜ.க.வை மறைமுகமாக அமிதாப் பச்சனின் மனைவி
ஜெயா பச்சன்

கொடுமைகளுக்கு எதிராகவும், மேற்கு வங்க மக்களின் ஜனநாய உரிமைகளுக்காகவும் தனியாக போராடுகிறார். அவரது (மம்தா பானர்ஜி) உடைந்து விட்டது. ஆனால் அவர் இன்னும் போராடுகிறார். மேற்கு வங்க மக்களை மிரட்டுவதன் மூலம் யாரும் வெற்றி பெறவில்லை. அச்சுறுத்தல் அல்லது மிரட்டலுக்கு முன் மேற்கு வங்க மக்கள் ஒரு போதும் தலை குனிய மாட்டார்கள்.

மேற்கு வங்க மக்களை யாராலும் மிரட்ட முடியவில்லை.. பா.ஜ.க.வை மறைமுகமாக அமிதாப் பச்சனின் மனைவி
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்களின் உரிமைகளுக்காகவும், மரியாதைக்காகவும் போராடுகிறார். இது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகும். அவரை விமர்சிப்பவர்களுக்கு நான் அவமானம் அவமானம் என்று மட்டுமே சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.