“அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழகத்தில் பலிக்காது” -ஜவாஹிருல்லா பேட்டி

 

“அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழகத்தில் பலிக்காது” -ஜவாஹிருல்லா பேட்டி

திருச்சி

அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் பலிக்காது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திருச்சி பாலக்கரையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளது, மரபுகளை மீறிய செயல் என்றும் கூறினார்.

“அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழகத்தில் பலிக்காது” -ஜவாஹிருல்லா பேட்டி

தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போன்றது என குறிப்பிட்டார். மேலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம் என்று குறிப்பிட்ட அவர், அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலித்தது போல, தமிழகத்தில் பலிக்காது என்றும் அவர் கூறினார்.