ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்

 

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்

திருப்பத்தூர்

ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, ஜவ்வாது மலையை சேர்ந்த மலைவாழ் கிராமமக்கள் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். திருப்பத்தூர்மாவட்டம் ஜவ்வாதுமலையில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லி வாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகளின் கீழ், 30-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன.இங்கு ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்

இதுகுறித்து பல முறை மனு அளித்தும், மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இன்று மலைவாழ் மக்கள் தங்களது வீடுகளில் கருப்புகொடிஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கைகளில் கருப்புகொடியை ஏந்தி, ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.