“பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்” பிரதமர் மோடி இரங்கல்!

 

“பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்” பிரதமர் மோடி இரங்கல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.

“பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்” பிரதமர் மோடி இரங்கல்!

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் பொறுப்புகளை ஜஸ்வந்த் சிங் வகித்துள்ளார்.

இந்நிலையில் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங். அரசியல். சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக நினைவுகூரப்படுவார்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் .

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் பொறுப்புகளை ஜஸ்வந்த் சிங் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.