பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக்-க்கு கார்! அரசுவேலை வழங்க கோரிக்கை

 

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக்-க்கு கார்! அரசுவேலை வழங்க கோரிக்கை

இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசாக காரை வென்றார். 17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திற்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளைக்கான முதல்பரிசை பாலமேட்டைச் சேர்ந்த ஜெயராமன் பெற்றுகொண்டார். இவருக்கு காங்கேயம் பசுமாடு கன்றுடன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக்-க்கு கார்! அரசுவேலை வழங்க கோரிக்கை

பொறியியல் பட்டய படிப்பு படித்து வரும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான கருப்பாயூரணி கார்த்திக் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவயதிலே தனது தந்தை உயிரிழந்துள்ள நிலையில் மூன்று தங்கைகளுடன் ஏழ்மையான நிலையில் உள்ளதால் முதல்வர் உதவ வேண்டும் எனவும் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாவது பரிசு பெற்ற பிரபாகரன் பரிசை வாங்க மறுத்து களத்தை விட்டு வெளியேறினார்.தானே அதிகளவில் காளைகளை பிடித்து வெற்றி பெற்றதாகவும் விழா கமிட்டி முறைக்கேடு செய்ததாக குற்றம் சாட்டி, வீரர் பிரபாகரன் வெளியே சென்றார். அவர் உடன் வந்த நண்பர்கள் விழா கமிட்டிக்கு நன்றி தெரிவித்து, சிறப்பாக போட்டி நடத்தியதாக வேதனையுடன் தெரிவித்து சென்றனர்.