“முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்” – ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

 

“முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்” –  ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்தெந்த வழக்குகளை ரத்து செய்யலாம் என்ற பரிந்துரை பட்டியல் அரசுக்கு அனுப்பப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

“முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்” –  ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை முன்வைத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது எனலாம். இந்த போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு இளைஞர்கள், அமைப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

“முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்” –  ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

இந்த சூழலில் நேற்று சட்ட பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.காவல்துறையினரை தாக்கிய வழக்குகள், வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.

“முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்” –  ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ” ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்படுகிறது. தமிழக முதல்வர் உத்தரவுபடி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யபட்ட வழக்குகளில், எந்தெந்த வழக்குகளை ரத்து செய்யலாம் என்ற பரிந்துரை பட்டியல் அரசுக்கு அனுப்பப்படும்” என்றார்.