‘ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு!

 

‘ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு!

தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு என்று பேசியது வைரலாகியுள்ளது.

‘ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கமருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை திறப்புக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் தனது உரையின் முடிவில், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக்கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் இறுதியில், ஜெய்ஹிந்த் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறாதது சர்ச்சையானது. இந்த சூழலில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால், ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் தமிழ்நாடு என கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

‘ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு!

முன்னதாக பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது