LPL கோப்பையை வென்றது ஜாஃ ப்னா அணி – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

 

LPL கோப்பையை வென்றது ஜாஃ ப்னா அணி – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்ட இலங்கை LPL போட்டித் தொடர் சரியாகத் தொடங்கி இன்று இறுதிப் போட்டியில் நிறைடைந்துள்ளது. இந்தத் தொடரில் கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங் , ஜாப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடின.

இதில் கண்டி அணி தவிர மற்றவை அரையிறுதியில் மோதின. நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் நடந்தது.

LPL கோப்பையை வென்றது ஜாஃ ப்னா அணி – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

முதலில் பேட்டிங் ஆடிய ஜாஃப்னா அணியில் மாலிக் 46, டி பெரெரா 39, டி சில்வா 33 என ரன்கள் குவித்ததால் குறிப்பாக பெரெரா 14 பந்துகளில் 39 ரன்கள் விளாசியதால் அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் என உயர்ந்தது.

அடுத்து ஆடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் ராஜபக்‌ஷே 40, அஸாம் 36 ரன்கள் அடித்தும் 135 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா அணி இந்த ஆண்டின் எல்.பி.எல் கோப்பையை வென்றது.

LPL கோப்பையை வென்றது ஜாஃ ப்னா அணி – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

46 ரன்கள் அடித்ததோடு மட்டுமல்லாமல், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சோயிப் மாலிக் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோப்பையை வென்ற அனிக்கு பரிசுத் தொகை 1,85,00,000 இலங்கை ரூபாய்கள்.