வரி செலுத்துவோர் கவனத்திற்கு… இனி இதில் வரி செலுத்த முடியாது!

 

வரி செலுத்துவோர் கவனத்திற்கு… இனி இதில் வரி செலுத்த முடியாது!

2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில், இதனை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வரி செலுத்துவோர் கவனத்திற்கு… இனி இதில் வரி செலுத்த முடியாது!

அதுமட்டுமின்றி தற்போது வரி செலுத்த பயன்படுத்தப்படும் http://incometaxindiaefiling.gov.in என்ற வலைத்தளம் ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இயங்காது எனவும், ஜூன் 7 முதல் புதிய இ-பதிவு தளமான http://incometax.gov.in வருமான வரித்துறை தொடங்க இருப்பதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய வலைதளம் செயல்பட தொடங்கியவுடன் அனைவரும் வருமான வரி செலுத்துவோர் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது