விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… தலைக்கவசம் அணிந்ததால் உயிர் தப்பினார்…

 

விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… தலைக்கவசம் அணிந்ததால் உயிர் தப்பினார்…

அரியலூர்

விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி பகுதியை சேர்ந்தவர் சத்யசீலன். ஐ.டி.நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் இருந்த வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக சத்யசீலன் வாகனம் மீது, எதிரே வந்த மினி பேருந்து மோதியது.

விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… தலைக்கவசம் அணிந்ததால் உயிர் தப்பினார்…

இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்த சத்யசீலன், பேருந்தின் பின்புறமுள்ள சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். மற்றொரு சக்கரத்தில் அவரது வாகனம் கிக்கியது. அவர் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட் மீது பேருந்து சக்கரம் ஏறி நின்றபோதும், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து, பேருந்து பயணிகள் சத்யசீலனை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… தலைக்கவசம் அணிந்ததால் உயிர் தப்பினார்…

அங்கு சத்யசீலனுக்கு கை மற்றும் காலில் ஏற்பட்ட சிராய்ப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர், ஹெல்மட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிகழ்வு பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.