பேராவூரணி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஐ.டி. ஊழியர் பலி… குழந்தையை காப்பாற்ற சென்றபோது சோகம்!

 

பேராவூரணி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஐ.டி. ஊழியர் பலி… குழந்தையை காப்பாற்ற சென்றபோது சோகம்!

தஞ்சை

பேராவூரணி அருகே குழந்தையின் மீது மின்கம்பி அறுந்த விழுந்ததை கண்டு, அவனை காப்பாற்ற முயன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த பின்னவாசல் சித்தாதிகாட்டை சேர்ந்தவர் கதிர்வேல் (32). இவர் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 வயதில் அன்புசெல்வன் என்ற ஆண் குழந்தை உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக கதிர்வேல், வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்ததுள்ளார்.

பேராவூரணி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஐ.டி. ஊழியர் பலி… குழந்தையை காப்பாற்ற சென்றபோது சோகம்!

இந்த நிலையில், இன்று காலை வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கதிர்வேல் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் குழந்தை தீக்காயத்துடன் உயிர் தப்பினான். அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், கதிர்வேலின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.