இந்த மாவட்டங்களில் மார்ச் 13 ஆம் தேதி வரை மழை பெய்யும்!

 

இந்த மாவட்டங்களில் மார்ச் 13 ஆம் தேதி வரை மழை பெய்யும்!

மார்ச் 13-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மார்ச் 13 ஆம் தேதி வரை மழை பெய்யும்!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால். பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை முதல் 13-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த மாவட்டங்களில் மார்ச் 13 ஆம் தேதி வரை மழை பெய்யும்!

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் முற்பகலில் வானம் ஓரளவு தெளிவாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது . அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு ,பாபநாசம் பகுதியில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ,திருப்பதிசாரம், கன்னியாகுமரி , நாகர்கோவிலில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.