அடுத்த 3 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

 

அடுத்த 3 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

முன்னதாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நாளை முதல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.