13 மாவட்டங்களில் மழை பெய்யும்!

 

13 மாவட்டங்களில் மழை பெய்யும்!

மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருப்பூர் ,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை ,திருச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ,ஈரோடு ,தென்காசி, திருநெல்வேலி ,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

13 மாவட்டங்களில் மழை பெய்யும்!

வருகின்ற 23ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென்காசி ,திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை பெய்யும்!

சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.