அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் காலை முதலே கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வந்தது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ரத்தினமங்கலம், மேலகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.