இந்த மாவட்டங்களில் ‘5 நாட்களுக்கு’ மழை பெய்யும்!

 

இந்த மாவட்டங்களில் ‘5 நாட்களுக்கு’ மழை பெய்யும்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் ‘5 நாட்களுக்கு’ மழை பெய்யும்!

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

இந்த மாவட்டங்களில் ‘5 நாட்களுக்கு’ மழை பெய்யும்!

இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதி ,மத்திய வங்கக் கடல், தெற்கு வங்கக்கடல் ,தென் கிழக்கு, மத்திய வங்கக் கடல் ,தெற்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.