தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும்!

 

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இரவு, பகல் பாராமல் பெய்து வரும் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கடலூர், விழுப்புரம் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி , நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையினால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும்!

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகளில் இவற்றில் 4 ஆயிரத்து 266 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளன.