அமைச்சர் எம்.சி சம்பத் உறவினரின் வீட்டிலிருந்து ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல்

 

அமைச்சர் எம்.சி சம்பத் உறவினரின் வீட்டிலிருந்து ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுஒருபுறம் இருக்க தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர். அந்தவகையில் கடந்த 27 ஆம் தேதி முதல் அமைச்சர் எம்.சி சம்பத்தின் சம்பந்தியும், தனியார் பள்ளி கூட்டமைப்புகளின் மாநில செயலாளருமான இளங்கோவன் நடத்தும் பள்ளியில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் எம்.சி சம்பத் உறவினரின் வீட்டிலிருந்து ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல்

தருமபுரியில் அமைச்சர் எம்.சி சம்பத் உறவினரின் சிட் பண்ட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில்வராத ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் சம்பத்தின் உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது.