கருணாநிதிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு

 

கருணாநிதிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் ஒருபுறம் அரசியல் கட்சியினரின் பரப்புரை தீயாய் அரங்கேறி கொண்டிருக்கிறது. மறுபுறம் முக்கிய அரசியல் பிரமுகர்களை குறிவைத்து வருமான வரித்துறையினரின் சோதனை ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்லில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், இதன் பின்புலத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். அண்மையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டநிலையில் இன்று காலை ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

கருணாநிதிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய திரைப்படங்களை தயாரித்தவர் ஜெயமுருகன் என்பது குறிப்பிடதக்கது. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜெயமுருகன் SNJ மதுபான ஆலைக்கு சொந்தக்காரராவார். காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு SNJ என்ற தனியார் மதுபான உற்பத்தி ஆலை செயல்படுகிறது. மதுபானம் மட்டுமின்றி லாட்டரி உள்ளிட்ட தொழில்களையும் ஜெயமுருகன் நடத்திவருகிறார்.