‘முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை கூறாதது வருத்தமளிக்கிறது’ – ஓபிஎஸ் – ஈபிஎஸ்

 

‘முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை கூறாதது வருத்தமளிக்கிறது’ – ஓபிஎஸ் – ஈபிஎஸ்

முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயர் இடம்பெறாததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

‘முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை கூறாதது வருத்தமளிக்கிறது’ – ஓபிஎஸ் – ஈபிஎஸ்

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “நமது தேசம் சுதந்திரம் பெறுவதற்கு பெரும்பங்கு ஆற்றியவர்கள் தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்களின் வீரமும். தீரமும் துணிவும் கொடையும் அளப்பரியது. அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில். அனைவருக்கும் மணி மண்டபங்களும் சிலைகளும் அமைத்து நினைவு கூறும் வகையில் அரசு விழா எடுக்கப்படுகிறது.

மறைந்த அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், அவர்கள் தம் தியாகத்தை போற்றும் விதமாகவும், அனைவரின் பெயரையும் சுதந்திர தின உரையில் நினைவு கூறுவது வழக்கம்.

ஆனால் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை தவிர்த்து மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை மட்டும் நினைவுகூர்ந்து பேசியது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1991 – 96 ல் அதிமுக அரசு மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு சென்னை எழும்பூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 38.50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க பட்டு அது 2004ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அவர்தம் பிறந்த நாளான ஜூலை 11-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாக கொண்டாடுவதற்கு அதிமுக அரசு அறிவித்தது.

இத்தகைய போற்றுதலுக்குரிய அவரின் பெயரை இந்த சுதந்திர தின பொன்விழா ஆண்டில் நினைவு கூறாமல் சுதந்திர தின உரை நிகழ்த்தியது வருத்தமளிக்கிறது. சாதி, மத, பேதமற்ற அரசை தான் பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறார்கள் .அதன் அடிப்படையில் இது போன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நிகழாவண்ணம் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியிலும், புரட்சித்தலைவி அம்மா வழியில் நினைவு கூர்ந்து ஒரே ரீதியான மரியாதையையும், கௌரவத்தையும் வழங்கி அவர்களை புகழ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.