சென்னையில் இன்னும் 4 மாதத்திற்கு மாஸ்க் அணிவது அவசியம்!
Aug 28, 2020, 14:36 IST1598605563000
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை இரண்டுமே அதிகரித்து வருகிறது. இந்த கொடிய அரக்கனை அழிக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.
சென்னையில் குறைந்து வந்த தொற்றின் வீரியம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் இன்னும் 4 மாதத்துக்கு மாஸ்க் அணிவது அவசியம் என்றார். மேலும் கொரோனா இல்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் கமிஷன் தருவதாக தவறான தகவலை பரப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.