வி.பி.துரைசாமி மூலம் தி.மு.க-வின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் எல்.முருகன்!

 

வி.பி.துரைசாமி மூலம் தி.மு.க-வின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் எல்.முருகன்!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி மூலமாகவே கு.க.செல்வம் பா.ஜ.க-வில் இணைய முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வி.பி.துரைசாமி மூலம் தி.மு.க-வின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் எல்.முருகன்!
தென் சென்னை மாவட்டச் செயலாளராக அன்பழகன் இருந்தார். கொரோனா தொற்று காரணமாக அவர் காலமானதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு கு.க.செல்வம் முயற்சி செய்தார். பதவி கிடைக்காத நிலையில் கு.க.செல்வம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

வி.பி.துரைசாமி மூலம் தி.மு.க-வின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் எல்.முருகன்!
இந்த நிலையில் தி.மு.க-வில் இருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்து, தமிழக பா.ஜ.க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி மூலமாக கு.க.செல்வத்திடம் பேசியுள்ளார் பா.ஜ.க தலைவர் முருகன். தமிழகம் முழுவதும் அதிருப்தியில் உள்ள தி.மு.க நிர்வாகிகளிடம் பேசும் வேலையை வி.பி.துரைசாமி மூலமாக எல்.முருகன் செய்து வருகிறார். அதன் பலனாக கு.க.செல்வம் தமிழக பா.ஜ.க-வில் இணையும் முடிவெடுத்துள்ளதாக பா.ஜ.க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

வி.பி.துரைசாமி மூலம் தி.மு.க-வின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் எல்.முருகன்!
இன்னும் பலர் விரைவில் தி.மு.க-வில் இருந்து விலக பா.ஜ.க-வில் இணைய உள்ளனர். சில எம்.பி-க்களே கூட கட்சி மாற தயாராக உள்ளனர். பலரிடமும் பேசி வருகிறோம். வி.பி.துரைசாமியை மு.க.ஸ்டாலின் மிகச் சாதாரணமாக கருதிவிட்டார். அதன் பலனை அவர் அனுபவிப்பார் என்று பா.ஜ.க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
தொடக்கத்தில் பெரிய அளவில் இதைப் பற்றி ஸ்டாலின் கவலைப்படவில்லை. கு.க.செல்வம் செல்கிறார் என்ற நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தை அவசரமாக அவர் கூட்டியிருப்பதன் மூலம் முருகனின் சாமர்த்தியம் வெளிப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.