சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கொட்டி தீர்த்த மழை!

 

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கொட்டி தீர்த்த மழை!

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்தது. அதன்படி சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கொட்டி தீர்த்த மழை!

அதன்படி சென்னையில் நேற்றிரவு பெய்ய தொடங்கிய மழையானது காலை முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கொட்டி தீர்த்த மழை!

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை காரணமாக சென்னை குளிர்ச்சியான வானிலையுடன் காணப்படுகிறது. அதேபோல் திருவண்ணாமலை, கரூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.