கொரோனாலாம் ஓடிடுச்சி… வேலைக்கு வாங்க!! ஐ.டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி!

 

கொரோனாலாம் ஓடிடுச்சி… வேலைக்கு வாங்க!! ஐ.டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி!

சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. அதனால் அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் பணியாற்றுமாறு அரசு உத்தரவிட்டது. அதன் படி அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

கொரோனாலாம் ஓடிடுச்சி… வேலைக்கு வாங்க!! ஐ.டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி!

இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்களே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் ஐ.டி. ஊழியர்கள் பணிக்கு செல்லலாம் என்ற தெரிவித்துள்ளது.