“மாணவர்களை அலைக்கழைக்காதீர்கள்… தாமதமின்றி வழங்குங்கள்” – அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

 

“மாணவர்களை அலைக்கழைக்காதீர்கள்… தாமதமின்றி வழங்குங்கள்” – அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

“மாணவர்களை அலைக்கழைக்காதீர்கள்… தாமதமின்றி வழங்குங்கள்” – அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இன்றிப் பெற்றுச் செல்ல ஏதுவாகக் குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

கொரோனாவை ஒழிக்க கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க அரசு தயார்” -  அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தகவல்!

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.