சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்; மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு!

 

சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்;  மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு!

தமிழகத்தின் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்த போது, அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்தது. குறிப்பாக, சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பரிசோதனையை அதிகரித்ததால் இது சாத்தியமானது. அதனால் தற்போது சென்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்;  மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு!

இந்த நிலையில் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு திரும்புபவர்களை தனிமை படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வேலைக்கு வருவோர் தகவலை மண்டல அதிகாரிகள் சேகரித்து மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.