முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? கனிமொழி எம்.பி. ட்வீட்!

 

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? கனிமொழி எம்.பி. ட்வீட்!

உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? கனிமொழி எம்.பி. ட்வீட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வம் என்பவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சொத்துத் தகராறு காரணமாக நடந்த இந்த கொலைக்கும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்த நிலையில் அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் காவலரை பணிநீக்கம் செய்யாமலும், கைது செய்யாமலும் இருக்கும் நிலையில் அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதனால் அப்பகுதி மக்கள் செல்வம் உடலை வாங்க மறுத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?” என்று பதிவிட்டுள்ளார்.