நில ஆக்கிரமிப்பு வழக்கு… சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

 

நில ஆக்கிரமிப்பு வழக்கு… சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, எந்த ஒரு அரசு கட்டடங்களோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் கிராம நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நில ஆக்கிரமிப்பு வழக்கு… சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

அதேசமயம், அருகில் உள்ள அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அந்த நிலங்களை பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நில ஆக்கிரமிப்பு வழக்கு… சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது . அப்போது பல்கலைக்கழகம் தரப்பில் தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய நோட்டீஸ் வழங்க வேண்டும் சர்வே முழுமையான நடத்தப்பட வேண்டும் என்றும் வீடு கிராப் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டு, அதன் அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.