ரோஹித் ஷர்மாவின் அதிரடி உண்டா… கிடையாதா? – கேப்டன் ரஹானா சொல்லும் அப்டேட்

 

ரோஹித் ஷர்மாவின் அதிரடி உண்டா… கிடையாதா? – கேப்டன் ரஹானா சொல்லும் அப்டேட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாம் டெஸ்ட் போட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இப்போது எல்லோரின் கவனமும் இந்திய அணி மீதுதான் குவிந்துள்ளது.

முதல் டெஸ்ட்டில் இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது நினைவிருக்கலாம். ஆனால், அடுத்த போட்டியில் ரஹானே கேப்டன் பொறுப்பேற்று, அசத்தலான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார். இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி இருக்குமா… இருக்காதா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கு முன் ரோஹித் ஷர்மா ஏன் இந்த ஆஸ்திரேலியா டூரில் தொடக்க முதலே ஆட வில்லை என்பதைப் பார்த்துவிடுவோம்.

ரோஹித் ஷர்மாவின் அதிரடி உண்டா… கிடையாதா? – கேப்டன் ரஹானா சொல்லும் அப்டேட்

ஆஸ்திரேலியா செல்லும் கிரிக்கெட் அணியில் எதிலும் ரோஹித் ஷர்மா பெயர் இல்லை. அவரின் உடல்நிலை தகுதி குறைபாடு காரணமாகச் சொல்லப்பட்டது. அதன்பின், அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதைப் பார்த்து, டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மா பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனபோதும், அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை முன்னாள் வீரர்களும் எழுப்பினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி சோதனையை நடத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்தச் சோதனையில் ரோஹித் போட்டிகளில் ஆடுவதற்கான உடற்தகுதியோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உடற்தகுதி சோதனையில் தேறியதால், டிசம்பர் 13-ம் தேதி ஆஸ்திரேலிவுக்குச் செல்கிறார். அதனால், அவர் உடனடியாகப் போட்டியில் ஆடத் தொடங்கிவிடுவார் என்று நினைத்தால் அதுதான் தவறு.

ரோஹித் ஷர்மாவின் அதிரடி உண்டா… கிடையாதா? – கேப்டன் ரஹானா சொல்லும் அப்டேட்

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ரோஹித் ஷர்மா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அதன்பின்பே வீரர்களோடு சேர்ந்து ஆட அனுமதிக்கப்படுவார். அதனால், டிசம்பர் 13-ம் தேதியிலிருந்து கணக்கு வைத்தாலும், டிசம்பர் 27-ம் தேதி வரை ரோஹித் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.

இந்தத் தனிமைப்படுத்தும் காலமும் முடிவடைந்துவிட்டது. இனியாவது களத்தில் இறங்குவாரா…. என்ற கேள்விக்கு கேப்டன் ரஹானே பதில் சொல்லியிருக்கிறார். ‘ரோஹித் ஷர்மாவிடம் பேசிவிட்டேன். அவர் களம் இறங்க ரெடியாக இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாம் டெஸ்ட்டில் ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்களைக் காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.