ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளரா? திமுக செயலாளரா ? : கரு.நாகராஜன் கேள்வி!

 

ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளரா? திமுக செயலாளரா ? : கரு.நாகராஜன் கேள்வி!

உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளரா? திமுக செயலாளரா ? : கரு.நாகராஜன் கேள்வி!

சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்தும் நடிகர் சூர்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சைப்படுத்திய எம்எல்ஏ ஈஸ்வரன், மற்றும் அதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளரா? திமுக செயலாளரா ? : கரு.நாகராஜன் கேள்வி!

இந்நிலையில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், “உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அத்துறையின் செயலாளரா?அல்லது திமுகவில் செயலாளரா? என்று தெரியவில்லை.நீட் குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர மாணவராகவோ, அல்லது பெற்றோராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. திமுகவின் கூட்டணி கட்சிகள் வழக்கில் தங்களை சேர்த்துக்கொள்ள கேட்டுள்ளது. நாளை நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதத்தை வலுவாக எடுத்துரைப்போம்” என்று கூறியுள்ளார்.