முதல்வரின் தாயார் குறித்த ஆ.ராசாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு?

 

முதல்வரின் தாயார் குறித்த ஆ.ராசாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு?

தமிழக தேர்தல் களத்தில் பெரிய பூதாகரமாக வெடித்தது முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தான். இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் கொந்தளித்த அதிமுகவினர் ராசாவின் உருவபொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். பிரச்சாரத்தில் முதல்வரும் ராசாவை கடவுள் தண்டிப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார். இச்சூழலில் இன்று காலை ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல்வரின் தாயார் குறித்த ஆ.ராசாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு?

இச்சூழலில் அடுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் மகேந்திரன் பெயரில் ஒரு லெட்டர் பேட் கடிதம் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தது. அக்கடிதத்தில், “சில நாட்களுக்கு முன் திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து கருத்து கூறியது கருத்துச் சுதந்திரத்துக்கு உட்பட்டது.

முதல்வரின் தாயார் குறித்த ஆ.ராசாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு?

கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டித்து ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும் என நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் ஆ.ராசாவைக் கண்டித்து தேர்தல் நேரத்தில் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமுதாயச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பதறிப்போன மகேந்திரன் இதை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்தச் சுற்றறிக்கை தவறானது! அருவருக்கத்தக்க இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.