“எனக்கு தெரியாம இவனோட ஹோட்டலுக்கு போறியாடி .” -ஹோட்டலுக்குள் புகுந்த காதலன் செஞ்ச வேலை .

 

“எனக்கு தெரியாம இவனோட ஹோட்டலுக்கு போறியாடி .” -ஹோட்டலுக்குள் புகுந்த காதலன் செஞ்ச வேலை .


தான் காதலித்த காதலி வேறொரு நபருடன் ஹோட்டலுக்கு சென்றதால் கோவப்பட்ட காதலன் அந்த ஹொட்டலுக்குள் புகுந்து கலவரம் செய்தார் .

“எனக்கு தெரியாம இவனோட ஹோட்டலுக்கு போறியாடி .” -ஹோட்டலுக்குள் புகுந்த காதலன் செஞ்ச வேலை .


கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கத்ரி வட்டாரத்தில் ஒரு பெண்ணை ஒரு வாலிபர் காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் அந்த காதலி திடீரென அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு சனிக்கிழமை மதியம் 2:25 மணியளவில் தன்னுடைய ஆண் நண்பர்கள் சிலருடன் சாப்பிட சென்றார் .இந்த விஷயத்தை அந்த காதலனுக்கு தெரிந்த சில நபர்கள் அவருக்கு போன் செய்து சொல்லிவிட்டார்கள் .அதனால் அந்த காதலன் அந்த காதலியின் மீது கடுமையான கோபம் கொண்டார் .அதனால் அவரை பழிதீர்க்க முடிவெடுத்தார் .
அதனால் அவரின் காதலன் தன்னுடைய நணபர்கள் சிலரை அழைத்து கொண்டு அந்த ஹோட்டலுக்கு வந்தார் .அப்போது அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வந்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு அங்கு ஹோட்டலில் சாப்பிட்ட அந்த பெண்ணையும் அவரின் ஆண் ,பெண் நண்பர்கள் அனைவரையும் கடுமையாக உருட்டு கட்டையால் தாக்கினார்கள் .மேலும் சிலர் பெரிய கத்திகள் கொண்டும் தாக்கினார்கள் .அப்போது அந்த பெண்ணும் அவரின் தோழிகள் ,தோழர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள் .
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் சிக்கியது .மேலும் அந்த காட்சிகளை சமூக ஊடகத்திலும் வைரலாகி வருகிறது .இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் அங்குள்ள காவல் நிலையத்தில் கலவரம் தொடர்பாக புகார் கூறினார்கள் .தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீசார் கலவரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகிறார்கள் .

“எனக்கு தெரியாம இவனோட ஹோட்டலுக்கு போறியாடி .” -ஹோட்டலுக்குள் புகுந்த காதலன் செஞ்ச வேலை .