“தயவுசெஞ்சி இந்த பக்கம் வந்திராதீங்க” – இந்தியர்களுக்கு தடா போட்ட முக்கிய நாடு!

 

“தயவுசெஞ்சி இந்த பக்கம் வந்திராதீங்க” – இந்தியர்களுக்கு தடா போட்ட முக்கிய நாடு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் எத்தனை வீரியமாக இருக்கிறது என்பதைக் கடந்த இரு நாட்களாக நாடு கண்டுவருகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. உபி, குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவலங்களும் ஏற்பட்டுள்ளன.

“தயவுசெஞ்சி இந்த பக்கம் வந்திராதீங்க” – இந்தியர்களுக்கு தடா போட்ட முக்கிய நாடு!

இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள். உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது இயல்பு. அப்படி மாறும்போது சில வைரஸ்களின் தீவிரம் குறையும் அல்லது முன்பை விட வீரியமாக இருக்கும். தற்போது இந்தியாவில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய வைரஸ் பயங்கர வீரியத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

“தயவுசெஞ்சி இந்த பக்கம் வந்திராதீங்க” – இந்தியர்களுக்கு தடா போட்ட முக்கிய நாடு!

மீண்டுமொரு லாக்டவுன் போட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கின்றனர். இந்தியாவில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அங்கிருந்து ஈரானுக்கு இந்தியர்கள் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருந்தன. தடை விதித்தாலும் சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவிற்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயார் என்று உறுதியளித்திருக்கின்றன.