பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

 

பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

முதல்வர் பழனிசாமியின் பரப்புரைக்கு அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி சென்றிருந்த நிலையில், அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில், காரில் சிறப்பு டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, டிஜிபி திரிபாதியிடம் சிறப்பு டிஜிபிக்கு எதிராக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் அவர் காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றப்பட்டார். சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக நேற்று டிஜிபி திரிபாதி அறிவித்தார். இந்நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தியுள்ளனர்.