“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.

 

“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய மகளின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி காயப்படுத்தி ,சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டு மாநிலத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் டீனேஜ் மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.அவரின் மகளோடு அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் அடிக்கடி போனில் பேசுவதும் ,சிரித்து விளையாடுவதையும் ,ஒன்றாக ஊர் சுற்றுவதையும் கண்டு பொறுக்க முடியாத அந்த போலீஸ் அதிகாரி அந்த மாணவனை ,பல போலிசார் உதவியுடன் காவல் நிலையத்துக்கு தூக்கி வந்தார் .பிறகு அந்த மாணவனை அந்த போலீஸ் அதிகாரியும் ,மேலும் சில போலீஸ் காரர்களும் சேர்ந்து இனி என்னுடைய மகளுடன் பேசக்கூடாது என்றும் ,அவளோடு ஊர் சுற்றக்கூடாது என்றும் ,அவருக்கு போன் கூட பண்ண கூடாது என்றுக் கூறி அவரை கொடுமை ப்படுத்தியுள்ளார் .

“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.
மேலும் அந்த மாணவனை சிகெரட்டால் பல இடங்களில் சுட்டுள்ளார் .இதனால் கடும் காயமுற்ற அந்த மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் இந்த சம்பவம் பற்றி கூறியதும், அவர்கள் அந்த போலிஸ் அதிகாரி மீது, அவருக்கு உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்கள் .பிறகு இந்த சம்பவம் பற்றி அந்த போலீஸ் அதிகாரியிடம் அவரின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது ,அதை அவர் மறுத்துள்ளார் .ஆனால் அந்த சிறுவனின் மருத்துவ பரிசோதனை அறிக்கை மூன்று முதல் நான்கு பேர் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது

“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.