ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் ஐதரபாத் அணி த்ரில் வெற்றி! வெளியேறியது பெங்களூரு அணி…

 

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் ஐதரபாத் அணி த்ரில் வெற்றி! வெளியேறியது பெங்களூரு அணி…

ஐபிஎல் கிரிக்கெட்டில் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும் படிக்கல்லும் களமிறங்கினர். கோலி 6 ரன்களிலும் படிக்கல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு வந்த பிஞ்ச் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஏபி டிவில்லியர்ஸ் மட்டும் தனி ஒருவனாக நின்று அரை சதம் அடித்தார். ஏபி டிவில்லியர்ஸ் 56 ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் ஐதரபாத் அணி த்ரில் வெற்றி! வெளியேறியது பெங்களூரு அணி…

32 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. கோஸ்வாமி ரன் எதுவும் எடுக்காமலும், வார்னர் 17 ரன்களிலும்,மணிஷ் பண்டே 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வில்லியம்சன் மற்றும் ஹோல்டர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 19.4 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி தகுதிச்சுற்று இரண்டிற்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணியுடன் தகுதிச்சுற்று இரண்டில் மோத உள்ளது. தோல்வியடைந்த பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது