ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்!

 

ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்!

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்!

இந்நிலையில் மும்பையில் ஐபிஎல் நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆலோசனையில் இறுதி போட்டிக்கான தேதி நவம்பர் 10-ஆம் தேதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டிகள் வழக்கமான 8 மணிக்கு தொடங்காமல், 7.30 மணி அளவில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.