ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

 

ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐபிஎல் என்று சொன்னாலே வெற்றி, தோல்வி என்பதை தாண்டி பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நம் கண்முன்னே வந்து செல்லும். ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்த சம்பவம், கிரிக்கெட் சூதாட்டத்தால் சென்னை அணிக்கு தடை என ஒவ்வொரு சீசனிலும் , ஐபிஎல் சர்ச்சைகளுடனே பயணித்து வருகிறது.

ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

இந்த நிலையில் பெங்களூரு மல்லேஷ்வரம் உள்ளிட்ட 2 இடங்களில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

கொரோனா தடைகளைத் தாண்டி 13 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா கடந்த 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நவம்பர் 3 வரை நடக்கும் நிலையில் அதற்கு பிறகு பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.