இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி! 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எட்டியது சிஎஸ்கே

 

இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி! 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எட்டியது சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட்டின் 34வது ஆட்டத்தில் , தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின.

சார்ஜா மைதானம் சிறியது என்பதால் இங்கு ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது. இங்கு முதலில் பேட்டிங் செய்வது சாதகமானது என்பதால் ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக பியூஸ் சாவ்லாக்கு பதிலாக கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார்.

இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி! 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எட்டியது சிஎஸ்கே

சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பாப் டு ப்ளஸி மற்றும் சாம் கரன் களம் இறங்கினர். கடந்தமுறை அதிரடி துவக்கம் தந்த சாம் கரன் , இம்முறை ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ஷேன் வாட்சன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பாப் டு ப்ளஸி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் ராயுடு மற்றும் ஜடேஜா அதிரடியாக ஆடி ரன்களை மளமளவென உயர்த்தினர். ஜடேஜா 33 ரன்களும் , ராயுடு 45 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எட்டியது.